கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி

கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி - பொதுவாக கூட்டு பட்டாவில் இருந்தால் சொத்து பிரச்சனை, நிலம் பிரச்சனை மற்றும் நில எல்லை தகராறு போன்றவைகள் ஏராளமாக இருக்கும். அதனை சரிகட்டவே ஒரு சிலர் கூட்டு பட்டாவில் இருந்து தனியாக மாற்றி கொள்வர். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு நிலத்தின் உரிமையாளர்களாக இருந்தால் அது கூட்டு பட்டா எனப்படும். ஆனால் ஒரே சர்வே எண் அல்லது இரண்டு சர்வே எண்களுக்கும் நிலங்கள் ஒட்டுமொத்தமாக தான் காட்டும். ஒருவருக்கு இந்த சர்வே எண் அல்லது ஒருவருக்கு மட்டும் குறிப்பிட்டு நிலங்களை பட்டாவில் காட்டாது.

இதையும் காண்க: கூட்டு பட்டா பிரச்சனை

கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி


கூட்டு பட்டா தனிப்பட்டா 

கூட்டு பட்டா என்றால் என்ன என்பது பற்றி மேலே உள்ள பத்தியில் பார்த்தோம். இப்போது கூட்டு பட்டாவில் இருக்கும் ஒரு நபர் மட்டுமே தனியாக பட்டா வாங்க வேண்டும் என்று நினைத்தால் அந்த சொத்தின் நகல் மற்றும் பாகப்பிரிவினை பத்திரம் வேண்டும். பாகப்பிரிவினை பத்திரம் எதற்கு என்றால் உங்களுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பார்கள். அந்த நிலம் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு என எந்த திசைகளில் இருக்கிறது எனவும் அதில் மென்ஷன் செய்திருக்கும்.

இதையும் படியுங்க: தோராய பட்டா என்றால் என்ன

இதனை தவிர்த்து லேண்ட் சர்வேயர் கொண்டு உங்களுக்கான நிலங்களை அளந்து அதற்கொரு வரைபடத்தை கொடுக்க வேண்டும். பிறகு தான் நீங்கள் இ சேவை மையம் அல்லது கிராம நிர்வாக அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிக்க: Veetu vari online payment

கூட்டு பட்டா பிரிப்பது எப்படி

கூட்டு பட்டாவில் இருக்கும் இதர ஆட்கள் எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று ஒன்று லெட்டர் எழுதி கொடுக்க வேண்டும். இதனை முதலில் VAO சரிபார்த்து விட்டு பிறகு தாசில்தார் சரிபார்த்த பிறகு தான் தனி பட்டாவாக மாற்றி கொடுப்பார்கள். இதர ஆட்களும் இதே போல் செய்து அவர்களும் தனி பட்டாவாக மாற்றி கொள்ள முடியும். மேலும் கூட்டு பட்டாவில் இருக்கும் சொத்தை வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சொத்தை விற்கும்போது யார் யார் கூட்டு பட்டாவில் மற்றும் பத்திரத்தில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரின் ஒப்புதல் அவசியம்.

பத்திர பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்

சான்றளிக்கப்பட்ட நகல்

Eservices