பஞ்சாயத்து வீட்டு வரி Online payment

பஞ்சாயத்து வீட்டு வரி Online payment - வரிகள் எல்லாவற்றுக்கும் நாம் கொடுத்து ஆக வேண்டும். இப்போது நாம் வீட்டு வரி பற்றி காண்போம். அதிலும் கிராம பஞ்சாயத்து வரிகள் நாம் கட்டாயம் அறிந்து இருக்க வேண்டும். வரிகள் நாம் 1958 லிருந்து நாம் செலுத்துகிறோம். ஆனால் நம் அரசாங்கம் அதனை 1994 இல் தான் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கீழ் செயல்படும் ஊர்களை பராமரிப்பதற்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.

பஞ்சாயத்து வீட்டு வரி


வரிகள் பேரூராட்சி, நகராட்சி, கிராமம் மற்றும் மாநகராட்சி என பிரித்து பிரித்து தான் வரிகள் வசூலிக்க படும். முக்கியமான விஷயத்தை நாம் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால் நகராட்சிக்கும் மாநகராட்சிக்கும் வரிகள் வேறுபாடாகும்.

இதையும் காண்க: நகராட்சி சொத்து வரி ஆன்லைன் கட்டணம்

நமது பஞ்சாயத்தில் வரிகள் வீட்டிலே வந்து கலெக்ட் செய்வார்கள். நமது கிராமத்தில் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை வீதம் என்று வசூல் செய்வார்கள். இதில் ஒவ்வொரு தனித்தனி குடும்பத்திற்கு வரிகள் வசூலிக்கப்படும். அதனை நாம் முறையாக செலுத்த வேண்டும். அப்படி செலுத்திய பின்னர் அந்த வரிக்கான ரசீதை பெற்று கொள்ளுங்கள். ஏனென்றால் கண்டிப்பாக சொத்து வரி, மின் கட்டண வரி ஆகியவை மிகவும் முக்கிய ஆவணமாக கூட பின்னாட்களில் பயன்தரும். ஆன்லைனில் கட்ட முடியாதவர்கள் அல்லது வெப்சைட் error பிரச்சனைகள் உள்ளவர்கள் நேரிடையாக பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று வரி கட்டிக்கொள்ளலாம்.

இதையும் படிக்க: வீட்டு வரி செலுத்துவது எப்படி

வீடு அல்லது சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்போது வீடு வரி மிகவும் பயனுள்ளதாக அமையும். ஒரு வீட்டில் அல்லது கட்டிடத்தில் இருந்ததற்கான ஒரு அத்தாச்சி தான் இந்த வீட்டு வரியாகும். மேலும் வீட்டு வரியோடு மின் கட்டணம் மற்றும் தண்ணீர் வரியும் மிகவும் பயன் தரும். ஏனெனில் நத்தம் புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களுக்கு பெரும்பாலும் பட்டா இருப்பதில்லை. பட்டா தருவதாக வருவாய் துறை முடிவெடுத்தால் மேற்கண்ட வரிகள் கட்டாயமே. அதும் 10 வருடத்திற்கு மேலாக உள்ள வரிகள் இருந்தால் கூடுதல் நன்மை பயக்கும். அதனால் வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ வருகின்ற வீட்டின் வரியை கட்டி அதனை சேமிக்க வேண்டும்.

ஊராட்சி வீட்டு வரி 

வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி