உழவர் அட்டை online apply

உழவர் அட்டை online apply ( ulavar attai apply online ) - உழவர்களுக்கென்று தனி ஒரு அடையாளமாக இருக்க வேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த அட்டையாகும். இது தமிழ்நாடு அரசால் 2011 இல் துவங்கப்பட்டது. இது அரசாணை எண் 265 கீழ் உருவாக்கப்பட்டது ஆகும்.


உழவர்கள் இதனை பயன்படுத்தி திருமண, கல்வி, மகப்பேறு மற்றும் கடன் உதவிகளை பெற்று கொள்ளலாம். இதில் பயிர் கடனாக ரூபாய் 3, 00, 000 வரை அரசாங்கம் தருகின்றது.

இதையும் படிக்க: புகைப்பட வாக்காளர் பட்டியல்

இதற்கு முன்னர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் கொடுத்து ஒரு ஒப்புகை சீட்டினை பெற்று கொண்டு கிராம நிர்வாக அலுவலரிடம் காண்பித்தால் இந்த அட்டையானது நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்க: இருவரும் ஒருவரே சான்றிதழ்

தற்போது அந்த கஷ்டங்கள் இல்லாமல் தமிழ்நாடு அரசு மக்களுக்கு சுலபமாக ஏற்படுத்தி கொடுத்துள்ளது. Tnesevai வெப்சைட்யை பயன்படுத்தி Rev 205 என்பதை தேர்வு செய்து மேல் பத்தியில் கூறியுள்ள ஆவணங்களை சப்மிட் செய்தால் போதுமானது.

குறிப்பு

அப்ளை செய்ய வேண்டுமென்றால் கேன் நம்பர் இருக்க வேண்டும். அதாவது கேன் நம்பர் வேண்டுமென்றால் நமது விவரங்களை பதிவு செய்து வைக்க வேண்டும்.

இதையும் படிக்க: ஆளறி சான்றிதழ் படிவம்