உடல் சூடு அறிகுறிகள் என்ன Udal Soodu Arikurigal enna, உடல் வெப்ப அறிகுறிகள், உடல் சூடாக காரணம் - உடலில் சூடு வந்துவிட்டால் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தான். அதனை அலட்சிய படித்தினால் மேலும் பிரச்சனை தான் என்றே தான் கூற வேண்டும். ஆனால் நிறைய பேர் நம்மில் அதனை கண்டுகொள்வதில்லை. அது என்னவென்றால் வேலை பளு, கல்லூரிக்கு செல்வது மற்றும் படிப்பு போன்ற காரணங்கள். எப்படி பார்த்தாலும் சரி செய்ய முடியும் நம்மால். நீங்கள் முக்கியமாக வெந்தயம் உபயோகியுங்கள். நீங்கள் உபயோகித்த உடன் உங்களுக்கு குளிர்ச்சியை தரும்.
அதை சரிசெய்யாவிடில் உங்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனை சந்திக்க நேரிடும். இதற்கு நீங்கள் சற்று நேரத்தை ஒதுக்கி செலவிடுங்கள். மிஞ்சு மிஞ்சி போனால் வெறும் 30 நிமிடம் ஆகும். அது என்னவென்றால் முறையான உணவு தான்.இளநீர், வெறும் வயிற்றில் தண்ணீர், மோர், வெந்தயம். இப்பொது உடல் சூடு அறிகுறிகளை காண்போம்.
1. கண் எரிச்சல்
2. தலை முடி உதிர்வு
3. வயிற்று வலி
4. நமைச்சல்
கண் எரிச்சல்
கண் எரிச்சல் அதிகமாக இருந்தால் நிச்சயமாக உடம்பு சூடு அல்லது காய்ச்சல் ஆக இருக்கும். ஒருசிலர் சூடு அதிகமாக இருந்தால் காய்ச்சல் என்று நினைத்து கொள்கின்றனர். அது நடப்பது இயல்பு. ஏனென்றால் அது ஒரு விதமான பயமே. உடம்பு சூடு அதிகமாக இருந்தால் முதலில் கண் எரிச்சல் அதிகமாக இருக்கும். மேலும் கண்களில் மிளகாய் தூள் போட்டார் போல் இருக்கும்.
தலைமுடி உதிர்வு
இது தான் அதிகமாக நிறைய பேருக்கு இருக்கும். தலைமுடி உதிர்வு உடம்பு சூடு அதிமாக இருப்பவர்களுக்கு அதிகமாக விழும். ஏனென்றால் உடம்பு சூடு நமது மண்டைக்கு ஏறும்போது இரத்த ஓட்டம் அதிகமாக இருக்காது. மேலும் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் மட்டுமே அத்தகைய பிரச்சனைகள் தீரும். நம் அதற்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதால் தலை எப்போதும் ஈரப்பதமாவே இருக்கும். முடி உதிர்வை குறைக்கலாம். ஆனால் முழுவதுமாக நீக்க முடியாது.
வயிற்று வலி
வயிறு வலி கண்டிப்பாக இருக்கும். ஆனால் எப்போதும் இருக்காது. வயிறு கூட சூடாக இருக்கும் பட்சத்தில் நாம் கண்டுபிடிக்கலாம். ஒருவேளை உங்களுக்கு இருப்பின் முதலில் நீங்கள் எதாவது சூட்டை தணிக்க கூடிய பழத்தை சாப்பிடுங்கள். முக்கியமாக வெந்தயம் மற்றும் மோர் குடியுங்கள்.
நமைச்சல்
உடலில் அங்கு அங்கு ஒரு சிலர்க்கு வெடிப்பு போன்ற தோல்கள் காணப்படும். அதற்க்கு காரணம் யார் என்றால் அவர்களே தான். அடிக்கடி தனது உடம்பில் எங்காவது நமைச்சல் ஏற்பட்டால் அவர்களால் தாங்க முடியாத பட்சத்தில் சொறிவர்கள். தயவுசெய்து அதனை முற்றிலும் தவிருங்கள்.