பங்குனி உத்திரம் 2025 தமிழ் நாட்காட்டி வாழ்த்துக்கள் ( panguni uthiram 2025 date in tamilnadu ) - தமிழ் மாதத்தில் கடைசியாக அதாவது 12 வது மாதம் இந்த பங்குனி ஆகும். அதேபோல் உத்திரம் நட்சத்திரம் 12 வது நட்சத்திரமாகும். இவை இரண்டும் மற்றும் பௌர்ணமி நாளும் சேர்ந்து வந்தால் அந்த நாள் பங்குனி உத்திரம் எனலாம். மிகவும் விசேஷமான நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் அருள்மிகு முருகப்பெருமானை வணங்குவதன் மூலம் அனைத்து நன்மைகளும் எளிதில் பெறலாம் என்பதே உண்மை.
மாதத்தில் சஷ்டி மற்றும் கார்த்திகை விரதமும் நாம் கடைப்பிடிக்கலாம். அதே சமயத்தில் இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திர திருநாளில் நாம் விரதம் மேற்கொள்வதன் மூலம் நமக்கு கோடான கோடி நன்மைகள் கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாதென்றே சொல்லலாம். ஏனெனில் அவ்வளவு நன்மை மிகுந்த நாள் இது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இந்நாளில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறும். அதில் திருச்செந்தூர் ஸ்தலம் 05.04.2023 முதல் 10.04.2023 வரை திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அதேபோல் பழனியில் 10 நாட்கள் வீதம் என சிறப்பு திருவிழாக்கள் நடை பெறும்.
இதையும் தெரிஞ்சிக்கோங்க: வெள்ளியங்கிரி மலை அனுமதி 2023
இந்த திருநாளில் நாம் விரதங்கள் மேற்கொண்டால் என்னென்ன நன்மை உள்ளதை கீழே காணலாம்.
1. திருமண தடைகள் நீங்க
2. பண கஷ்டம்
3. வாழ்வில் முன்னேற்றம்
நாம் இரண்டு நேரங்களை இந்த திருநாளில் கடைபிடிக்க வேண்டும். ஒன்று பௌர்ணமி நேரம் இன்னொன்று உத்திர நட்சத்திர நேரம்.
பங்குனி உத்திரம் 2025 date ( பௌர்ணமி மற்றும் உத்திரம் நேரம் )
ஏப்ரல் 10 ஆம் நாள் மதியம் 12.24 முதல் அடுத்த நாள் மதியம் 03.10 வரையும் பௌர்ணமி உள்ளது.
இதையும் படிக்கலாமே: காரடையான் நோன்பு 205 நேரம்