பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை

பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை - இதனை ஆங்கிலத்தில் பார்ட்டிசின் பத்திரம் என்பார்கள். இந்த பத்திர வகைகள் மொத்தமாக இரண்டு விதமாக பாகப்பிரிவினையாக மாறுகிறது. மூதாதையர், பூர்வீகம்,  உயில் எழுதாமல் இருக்கும் அசையா, அசையும் சொத்துக்கள் அல்லது கூட்டாக சேர்ந்து வியாபார நோக்கில் கட்டும் கடைகள் மற்றும் வீடுகள் போன்றவைகளால் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் பாகப்பிரிவினை செய்து கொள்ளலாம். இது கட்டாயமில்லை. இது அவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம் அல்லது முடிவு ஆகும்.

பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை


எடுத்துக்காட்டு 1

உயில் எழுதாமல் இருக்கும் சொத்துக்கள் அல்லது கூட்டு குடும்பத்தின் வழியாக வந்த சொத்துக்களை எப்படி சமமாக பிரிப்பது ?

உயில் எழுதாமல் போனால் முதல்நிலை வாரிசுகளுக்கு எவ்வித தயக்கமும் இன்றி செல்லும். முதல்நிலை வாரிசுகள் இல்லாத நிலையில் நேரடியாக இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு சென்று விடும். முதலில் அசையும், அசையா சொத்துக்களை லிஸ்ட் அவுட் செய்து பிறகு சொத்தின் மதிப்பை கணக்கிடவும். இதில் ஒரு சிலர் அசையா சொத்துக்களையும் ஒரு சிலர் அசையும் சொத்துக்களையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஆனால் இது கட்டாயமில்லை. சம பாகமாக பிரித்து எடுத்து கொண்டால் எந்த வித பிரச்சனையும் யாருக்கும் ஏற்படாது. இதற்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணம் கட்டணம் 1 சதவீதம் மட்டுமே. அதாவது ஒவ்வொரு பாகத்திற்கும் மட்டுமே இது பொருந்தும். இதில் தனித்தனியே பிரித்தால் அந்த இடத்திற்கு தேவையான பட்டா மற்றும் பத்திரம் உங்கள் பெயருக்கு மாற்றம் வேண்டும். இந்த பத்திரம் நீங்கள் ஒரு நல்ல பத்திர எழுத்தர் கொண்டு எழுதலாம்.

பட்டா சிட்டா

எடுத்துக்காட்டு 2

கூட்டாக ஒரு இடத்தை வியாபார நோக்கத்தோடு வாங்கினோம். ஆனால் இப்போது ஒன்றாக இணைந்து செயல்பட விருப்பமில்லை ?

மூன்றாம் நபரும் நீங்களும் சேர்ந்து ஒரு இடம் வாங்கிய பின்னர் பாகப்பிரிவினை செய்ய வேண்டுமென்றால் இரு தரப்பினரும் சம்மந்தப்பட்ட ஆவணங்களை தயார் செய்து பத்திரம் எழுதி பதிவு செய்து தனித்தனியே பட்டா மற்றும் பத்திரங்களை வாங்கி கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்குள் இடம் பிரிப்பதில் சிக்கல்கள் அல்லது மோசடி ஏற்பட்டால் நோட்டரி வக்கீல் மூலம் வழக்கு தொடர்ந்தால் நல்லது. அப்படி இல்லையென்றால் அந்த இடத்திற்கு உண்டான பணத்தை கொடுத்துவிட்டு ஒரு விடுதலை பத்திரத்தில் எழுதி அந்த நபரிடம் கையொப்பம் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள். இந்த பத்திரத்திற்கு பதிவு செய்ய முத்திரத்தாள் கட்டணம் 4 சதவீதமும் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும்.

சதுர அடி கணக்கிடுவது எப்படி