ஒருங்கிணைந்த சான்றிதழ் பெறுவது எப்படி pdf download, மாதிரி, படிவம் மற்றும் அதனை பெற தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதனை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகின்றோம். கருணை அடிப்படையில் அரசாங்க வேலையில் பணி நியமனம் செய்ய இந்த சான்று தேவைப்படுகின்றது. வாரிசுரிமை அடிப்படையில் இந்த வேலையானது கிடைக்கிறது.
அதாவது ஒரு அரசு ஊழியர் பணியில் உள்ளபோதே இறந்து விட்டால் அவர் குடும்பத்தில் பொருளாதார சூழல் ஏற்பட்டு விடுவர் என்கிற நோக்கத்தில் இந்த பணியானது அவர்களுக்கு சேர்கிறது. அதாவது கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற வழங்கப்படும் ஒருங்கிணைந்த சான்றிதழ் பெற கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இதையும் படிக்க: வருமான சான்றிதழ் status
1. இறப்பு சான்று
2. வாரிசு சான்று
3. வருமானம் ( ரூபாய் 2 லட்சத்திற்கு உள்ளாக இருத்தல் அவசியம் )
4. இருப்பிடம்
5. சாதி சான்று
6. சொத்து பத்திரம்
7. பணியாளர் வேலை செய்த அலுவலகத்தில் பணியாளர் நகல்.
மேற்கண்ட ஆவணங்களை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு அதனை கிராம நிர்வாக அலுவலகத்தில் சென்று வி ஏ ஓ விடம் கொடுக்க வேண்டும். அவர் அதனை உறுதிப்படுத்திய பின்னர் வருவாய் ஆய்வாளரிடம் செல்லும். அதற்கு பின்னர் மண்டல துணை வட்டாட்சியரிடம் செல்லும். இறுதியாக தாசில்தார் அவர்கள் அதனை உறுதிப்படுத்திய பின்னர் உங்கள் சான்றானது உங்களுக்கு வந்து சேரும்.
இதையும் படிக்க: முதல் திருமண சான்று கிராம நிர்வாக அலுவலர் pdf