மாங்காடு கோவில் நேரம்

மாங்காடு கோவில் நேரம் ( mangadu kamatchi amman temple timings ) - பூவிருந்தவல்லி அருகே மாங்காட்டில் அமைந்திருக்கும் அருள்மிகு காமாட்சியம்மன் திருத்தலத்தை பற்றி தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். குன்றத்தூர் வழியே இந்த கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவில் தினமும் திறந்திருக்கும். ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி நாட்களில் பகல் நேரங்களில் நடைகள் சாத்தப்படுவதில்லை.

மாங்காடு கோவில் நேரம்


மாங்காடு அம்மன் வழிபடும் முறை

இந்த கோவிலில் வார நாட்களில் 11 மணி அளவில் அபிஷேக ஆராதனைகளும் சனி கிழமை போன்ற நாட்களில் எலுமிச்சை பழம் வழிபாடும் இங்கு மிகவும் விசேஷமாகும். இங்கு நமது பிரார்த்தனைகள் நிறைவேற ஆறு எலுமிச்சை வீதம் ஆறு வாரங்களுக்கு வழிபட வேண்டும். ஆறு வாரங்களுக்கு நேரடியாகவே சென்றும் வழிபடலாம் அல்லது செல்ல முடியாதவர்கள் முதல் வாரத்தில் பூஜை செய்த எலுமிச்சை பழத்தை கொண்டு எஞ்சிருக்கக்கூடிய ஐந்து வாரம் வீட்டில் இருந்தபடியே நமது வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

இதையும் தெரிஞ்சிக்கோங்க: முத்துமலை முருகன் கோவில் செல்லும் வழி

பிரார்த்தனை

திருமணம் ஆகாதவர்கள் இங்கு வழிபடுவதன் மூலம் அவர்களுக்கு திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோன்று இதர பிரார்த்தனைகளும் கைகூடும் என்பது நம்பிக்கை. மாசி மகம், நவராத்திரி, சிவராத்திரி, பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சற்று முன்: வெள்ளியங்கிரி மலை அனுமதி 2023

காமாட்சியம்மன் கோவில் திறந்திருக்கும் நேரங்கள்

திங்கள் முதல் வெள்ளி கிழமைகளில் நடைகள் காலை 06 முதல் மதியம் 01.30 வரையும் மற்றும் மாலை 03 மணி முதல் இரவு 09.30 வரையும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைகள் காலை 05 டு இரவு 09.30 வரையும் திறந்திருக்கும்.

சற்று முன்: திருப்பதி நடைபாதை திறக்கும் நேரம்