வானிலை அறிக்கை இன்று மழை வருமா வராதா - ஒவ்வொரு நாளும் வானிலையின் மாற்றங்கள் மாறி கொண்டே தான் போகும். அதிகமாக அல்லது குறைவாக வெப்ப சலனம், மேக மூட்டம், மழை மற்றும் புயல் என நாள்தோறும் மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனை வருவதற்கு முன்னரே நமது விஞ்ஞானிகள் நமக்கு அவ்வப்போது தெரிவிக்கின்றனர். முன்பு எல்லாம் ஒரு கணிப்பாக இருந்தது. ஆனால் இப்போது அது போன்று இல்லை என்றே தான் கூற வேண்டும். இந்த பட்டா சிட்டா கோ இன் இணையத்தளம் வானிலை அறிக்கை செய்தியை நாள்தோறும் இந்த பக்கத்தில் பதிவு செய்கிறது. வானிலை மாற்றம், தாழ்வு நிலை, தீவிரம், இடியுடன் கூடிய மழை போன்றதும் அல்லாமல் மற்ற அறிக்கையும் ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளும் இங்கே அப்டேட் செய்கிறோம்.
07.12.2023 ( மதுரை ரிப்போர்ட் )
இன்றைக்கு நல்ல மேகமூட்டங்கள் காணப்படுவதால் மழை வருவதற்கு ( 08 ) சதவீதங்கள் வரை வாய்ப்பு இருக்கிறது.
14. 05. 2022
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பத்தொன்பது மாவட்டங்களில் கனமழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் விளக்கம்.
09.05.2022
அசானி புயல் வலுவடைந்து உள்ளதால் சென்னை உள்ளீட்ட ஒன்பது துறைமுகங்களில் பெருத்த கனமழை 10.05.2022 அன்று வரப்போகிறது என்று எதிர்பார்க்கலாம்.
08.05.2022
நாளை முதல் தமிழகத்தில் பதினாறு மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு அதிகமாகும்.
21.04.2022
தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
17.04.2022
சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி மற்றும் அதிகப்படியான வெப்பசலனத்தினால் அதிகமாக கனமழை வரும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15.04.2022
தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்.
14.04.2022
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சுழற்சி அதிகமாக காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் கரூரில் இருக்கிறது.
13.04.2022
இன்று மிகவும் கன மழை பின்வரும் மாவட்டங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1. தென் தமிழகம்
2. நீலகிரி
3. திருப்பூர்
09.04.2022
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பம் சலனம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் குமரி, நெல்லை, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை விடமால் பெய்யும்.
08.04.2022 & 09.04.2022
கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ள இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 07, 2022
இலங்கை மற்றும் உள் தமிழகத்தில் வளி மண்டல சுழற்சி காரணமாக வெப்ப சலனம் இருக்கிறது. இதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையில் 34.5 அதிகபட்சமான வெப்பநிலையும் 34.1 குறைந்தபட்ச வெப்பநிலையும் காணப்படுகிறது.
அப்டேட் ஏப்ரல் 05, 2022
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு.
அப்டேட் ஏப்ரல் 06, 2022
கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் ஏப்ரல் 05 யை போலவே ஒரு சில இடத்தில் மழை பெய்யும்.
டைம் 10.00 ஏ எம்
புதுக்கோட்டை, சிவகங்கை, மணமேல்குடி, ராமநாதபுரம் இடங்களில் 5 மில்லி மீட்டர் வரை மிதமான மழைகள் காணப்படும். மேலும் பல வானிலை பற்றிய தகவல்களுக்கு இந்திய வானிலை ஆய்வு துறை, மண்டல வானிலை ஆய்வு மையம் 6, கல்லூரி சாலை, சென்னை 600006 யை அணுகவும்.
இந்த வார இறுதில மழை பெய்யுமா