உழவர் திருநாள் தேதி 2024 தமிழ் வாழ்த்துக்கள் ( uzhavar thirunal 2023 in tamil date ) - இது தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றே. உழவர்கள் சூரிய பகவானை போற்றும் விதமாக தை மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து மூன்றாம் தேதி வரையும் பொங்கல் கொண்டாடுகிறார்கள். இதில் உழவர்களுக்கு தனி சிறப்பும் உண்டு. ஏனெனில் உழவர்கள் இல்லையெனில் மனிதர்களாகிய நமக்கு உணவு எப்போதும் கிடையாது. அவர்களை போற்றும் விதமாக தான் இதற்கு என்று தனி நாளாக தமிழர்கள் கொண்டாட காரணமாக அமைந்தது.
என்னதான் டிஜிட்டல் தொழில்நுட்பம் தற்போது வளர்ந்து விட்டாலும் உணவு என்பது உழவர்கள் தருவது தான். விவசாயிகள் அயராது உழைத்து அதில் விளைகின்ற தானியங்கள், பயிர் வகைகள் மற்றும் இதர உணவு பொருட்களை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உண்ண காரணமாக திகழ்கிறார்கள். அதனாலேயே எப்போதும் விவசாயிகளுக்கு தனிச்சலுகை உண்டு.
உழவர் பாதுகாப்பு திட்டம் 2023
தைத்திங்கள் முதல் நாள் பொங்கல், இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் மற்றும் மூன்றாம் நாளாக உழவர் திருநாளாக உள்ளது. இது உழவர்களை பெருமைப்படுத்தும் நோக்கில் இந்த தனிநாளினை அவர்களுக்கு ஒதுக்கிவிடப்பட்டு இருக்கிறது. இதன் நாள் பொதுவாகவே ஜனவரி மாதம் 16 ஆம் அன்றே வருவது குறிப்பிடத்தக்கது. லீப் ஆண்டு என்றால் இதன் தேதிகள் மாறலாம்.
உழவர் அட்டை பெறுவது எப்படி