தேய்பிறை அஷ்டமியில் என்ன செய்யலாம்

தேய்பிறை அஷ்டமியில் என்ன செய்யலாம் - எட்டு என்பதை திதிகளில் அஷ்டமி என்றும் நாம் சொல்லலாம். வளர் மற்றும் தேய்பிறை இவை இரண்டும் பௌர்ணமி மற்றும் அமாவாசைக்கு பிறகு எட்டாம் தேதியில் வருகின்ற திதிதான் இந்த அஷ்டமி. அருள்மிகு காலபைரவருக்கு மிகவும் உகந்த திதியாக  கருதப்படுகின்றது. சிவ ஆலயங்களில் வடகிழக்கு திசையில் கால பைரவர் இருப்பார். நாம் இறுதியாக பைரவரை கும்பிட்டு வருவது வழக்கம்.

தேய்பிறை அஷ்டமியில் என்ன செய்யலாம்


தீராத மனக்கவலை, பயம் மற்றும் இதர பிரச்சனைகள் நீங்கள் பைரவரை வணங்கலாம். பஞ்ச எண்ணெய் தீபம் வழிபடலாம். இலுப்பை, தேங்காய், பசு நெய், விளக்கு மற்றும் நல்லெண்ணெய் ஆகியவைகளை ஒவ்வொரு அகல் விளக்கு கொண்டு ஏற்றலாம். ஒவ்வொரு அகலும் தனித்தனியாக ஏற்ற வேண்டும். ஒரு விளக்கு ஏற்றி அதிலிருந்து மற்றொரு விளக்கு ஏற்ற கூடாது.

இதையும் படிக்கலாமே: அஷ்டமியில் மொட்டை போடலாமா