தாலி உருக்கள் எண்ணிக்கை

தாலி உருக்கள் எண்ணிக்கை - திருமாங்கல்யத்தில் முதலில் மூன்று உருப்படிகள் மட்டுமே காணப்படும். அதாவது புதிதாக கல்யாணம் செய்வோர்கள் மூன்று உருக்கள் மட்டுமே தாலியில் கோர்ப்பர். அவைகள் திருமாங்கல்யம், இரண்டு குண்டு மட்டுமே. தாலியை வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பிரித்து கோர்ப்பது பெண்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். திருவாதிரை, ஆடி பெருக்கு மற்றும் மீனாட்சி திருக்கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் பெண்கள் கட்டாயமாக அவர்களின் தாலியை பிரித்து கோர்ப்பார்கள்.

தாலி உருக்கள் எண்ணிக்கை


இதில் தாலியில் தங்கம் செய்து போட்டு இருக்கக்கூடியவை சிறந்தவையில்லை என கூறப்படுகிறது. ஏனெனில் உருக்கள் புதிதாக வைக்கும்போதும் சரி அல்லது மாற்றும்போது சரி எளிதாக இருக்கும். ஆனால் கயிறுகளில் கோர்க்கும் உருக்கள் முடிச்சுடன் இருக்கும். இருந்தாலும் அவரவர் விருப்பம் போல் தாலியை அணிந்து கொள்கின்றனர்.

இதையும் காண்க: தாலி கயிறு மாற்ற ஏற்ற நாள் 2023

என்னென்ன உருக்கள் இருக்கும்

முதலில் திருமாங்கல்யம், இரண்டு குண்டுகள் மட்டுமே இருக்கும். பிறகு காசு மணி, அரை காசு மணி, வாழை சீப்பு, மாங்காய், பவளம் மற்றும் கருகமணி போன்றைவைகள் கோர்க்கப்படுகின்றன.

தாலி உருக்களின் எண்ணிக்கை எவ்வளவு

எத்தனை வேண்டுமென்றாலும் கோர்த்து கொள்ளலாம். ஆனால் ஒற்றைப்படை இலக்க எண்களாக இருக்க வேண்டும். உதாரணமாக 3, 5, 7, 9, 11, 13 மற்றும் 15 என ஒரு இலக்க எண்களின் வரிசைப்படிதான் உருக்கள் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்க: நகம் வெட்ட கூடாத நாட்கள்