ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்

ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும் - ரேஷன் கார்டு முற்றிலுமாக இல்லாதவர்கள் புதிதாக மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ரேஷன் கார்டு இருந்து அதனை தொலைத்து விட்ட நிலையில் ரேஷன் பொருட்களை எப்படி வாங்குவது அல்லது ரேஷன் சார்ந்த மளிகை மற்றும் உதவி தொகைகளை எப்படி பெறுவது என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் எத்தனை குடும்ப அட்டை உள்ளது

ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்


பொதுவாக ரேஷன் அட்டையை தொலைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் கையடக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் அட்டையை தொலைப்பதற்கு மிகவும் வாய்ப்புகள் ஏராளம். அப்படி தொலைத்து விட்டால் அதனை எப்படி பெறுவது அல்லது பழைய மாதிரி பொருட்களை வாங்க முடியுமா என்கிற கேள்விகள் நம் மனதில் தோன்றும்.

அதற்காக நாம் வேறு எங்கும் அலைய தேவை இல்லை. Tnpds வெப்சைட் இல் நகல் மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதனை தேர்வு செய்து மறுபதிப்பு கோரிக்கைகளில் அதற்குண்டான காரணங்களையும் சரியாய் எழுதி என்டர் செய்தால் போதுமானது.

தொலைந்த ரேஷன் அட்டையை எங்கு வாங்குவது ?

ஒரு 15 லிருந்து 30 நாட்களுக்குள் உங்கள் ஊரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் உள்ள TSO அலுவலகம் சென்று ரூபாய் 20 செலுத்தி உங்கள் நகல் அட்டையை பெற்று கொள்ளலாம். 

ஒரு சில நேரத்தில் அட்டை பெற தாமதமாகும். அதனால் நீங்கள் பொறுமையாக தான் இருக்க வேண்டும். ஆனால் ரேஷன் பொருட்கள் அனைத்தும் வாங்க முடியும். உங்கள் ரேஷன் அட்டை பதிவிறக்கம் செய்து அதனை காண்பித்து எந்த வித பொருட்களையும் எளிதில் ரேஷன் கடையில் வாங்கலாம்.

வாங்கிய பின் உங்கள் தொலைபேசிக்கு நீங்கள் என்னென்ன பொருட்கள் வாங்கி உள்ளீர்கள் என்கிற செய்தி வரும். மேலும் நாம் அதனை tnpds வெப்சைட் இல் சென்று கூட பார்க்கலாம்.

அட்டை தொடர்பான சேவை நிலை அறிய

குடும்ப அட்டை பெயர் நீக்கல் சான்று