பவர் ஏஜென்ட்

பவர் ஏஜென்ட் - பவர் ஏஜெண்டை தமிழில் நாம் முகவர் என்றும் சொல்லலாம். தன்னால் முடியாத ஒரு சில காரணத்தினால் நிலத்தின் சொந்தக்காரர்கள் ஒரு நபரை நியமிப்பார்கள். அவர்கள் பவர் ஏஜென்ட் என்று அழைக்கப்படுவார்கள். எதற்காக இந்த பவர் ஏஜெண்டுகள் நியமிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

பவர் ஏஜென்ட்


கேள்வி 1

பவர் பத்திரம் போட்ட நபர் நிலம் அல்லது இடத்தை விற்பனை செய்ய முடியுமா ?

கண்டிப்பாக விற்பனை செய்யலாம். அதற்கு முதல்வரின் ஒப்புதல் கடிதமும் மற்றும் முதல்வரின் லைப் செர்டிபிகேட் அவசியம். 

கேள்வி 2

பவர் ஏஜென்ட் எத்தனை பேரை நியமிக்கலாம் ?

அதற்கு வரம்பு இல்லை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை பவர் ஏஜெண்டுகளாக நியமிக்கலாம்.

கேள்வி 3

பவர் பத்திரத்திரத்தை பவர் ஏஜெண்டுகள் அனுமதி இல்லாமல் ரத்து செய்ய முடியுமா ? 

முதல்வர் எப்போது வேண்டுமானாலும் அந்த பத்திரத்தை ரத்து செய்யலாம்.

கேள்வி 4 

பவர் ஏஜென்ட் முதல்வருக்கு தெரியாமல் நிலத்தை விற்று விட்டார் ? 

கண்டிப்பாக அந்த பத்திரம் செல்லாது. மேலும் ஒரிஜினல் உரிமையாளர் தனக்கு தெரியாமல் விற்று விட்டால் அந்த நிலம் கண்டிப்பாக விற்பனை செய்ய பட்டாலும் அந்த நிலம் இவருக்கே வந்து சேரும். 

தனி அதிகார பத்திரம் 

ஜெனரல் பவர் பத்திரம்

Tn.Gov.In