பெற்றோர் கனவில் வந்தால் - எந்த ஒரு மனிதனும் பெற்றோர்கள் இல்லாமல் இந்த பூமிக்கு வந்திருக்க முடியாது. பெற்றோர்கள் நாம் தெய்வமாக பாவிக்க வேண்டும். நாம் பிறக்கும் முதலில் இருந்து நமது காலம் முடியும் வரையும் நமது மேல் அன்பு, பாசம் ஒரே ஒரு சதவீதம் கூட மாறாமல் இருக்கக்கூடியவர்கள் நமது தெய்வங்களான பெற்றோர்கள். ஒருவன் செய்கின்ற செயல் எப்போதும் வெற்றி பெற வேண்டுமாயின் அவனுக்கு நிச்சயமாக பெற்றோர்களின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும். அதே சமயத்தில் தோல்வியை தழுவிய போதும் நமக்கு உறுதுணையாக இருப்பவர்கள் பெற்றோர்களே.
பெற்றோர்களை கனவில் கண்டால்
நமது அப்பா அம்மா இவர்கள் இரண்டு பேரும் கனவில் வந்தால் காரிய சித்தி உண்டாகும். காரிய சித்தி என்றால் எடுக்கின்ற எந்த ஒரு செயலும் வெற்றியை நோக்கி பயணிக்கும் என்பதை நினைவூட்ட வருகிறது. அதே சமயத்தில் பொருள் சேர்க்கை வரப்போகிறது என்பதையும் நினைவூட்டுகின்றது.
இதையும் படியுங்க: உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்