பசலி ஆண்டு என்றால் என்ன

பசலி ஆண்டு என்றால் என்ன கணக்கிடுவது எப்படி எண் - பசலி எண் என்பது ஒரு ஆண்டினை குறிக்கும். எப்படி ஒரு காலண்டர், நிதியாண்டு மற்றும் வங்கி ஆண்டு இருக்கிறதோ அதேப்போல் தான் பசலி ஆகும். ஆனால் ஒவ்வொரு பசலி ஆண்டினை 590 ஆண்டுகள் கழித்தால் பசலி கணக்கு வரும். அந்த கணக்கு தான் பசலி வருடமாகும்.

இது பொதுவாகவே வருவாய் துறை மற்றும் அறநிலைத்துறை இவைகளில் மட்டும் தான் உபயோகப்படுத்துவார்கள். இதில் ரெவினு துறை எனும் வருவாய்த்துறை தற்போது வரையும் பயன்படுத்தி வருகிறோம். மேலும் இதனை வருவாய் ஆண்டு அல்லது நில வரி ஆண்டு என்றும் பின்னாளில் அழைக்கக்கூடும். இது விளைச்சல், பட்டா, சிட்டா, அடங்கல் தொகுப்புகளை மேற்கொள்ள இந்த பெயரை வைத்தார்கள்.

பசலி ஆண்டு என்றால் என்ன


தற்போது உபயோகிப்படுத்தி வரும் ஆண்டுகள் - பசலை

1. 2020 ஆம் ஆண்டு - 1430

2. 2021 ஆம் வருடம் - 1431

3. 2022 ஆம் வருடம் - 1432

4. 2023 ஆம் வருடம் - 1433

5. 2024 ஆம் வருடம் - 1434

6. 2025 ஆம் வருடம் - 1435

7. 2026 ஆம் வருடம் - 1436 ( தற்போதைய பசலி ஆண்டு )

8. 2023 - 1433

9. 1983 - 1393

10. 1984 - 1394

11. 1985 - 1395.

பசலி ஆண்டு கணக்கீடு

ஜூலை 01 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரையும் இது கணக்கிடப்படுகிறது. மொத்தமாக 24 கிராம கணக்குகளை கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் இந்த பசலி ஆண்டில் சப்மிட் செய்வார். இது நடைமுறைக்கு வந்த ஆண்டு என்று பார்த்தால் 590 ஆம் வருஷம் தான். நடப்பு வருடத்தில் 590 கழித்தால் பசலை வருடம் வந்து விடும். தற்போது வரையும் இதனை கணக்கிட்டாலும் 1990 மற்றும் 2000 களில் அதிகமாக இதனை பயன்படுத்தி வந்தனர்.

வசதி உரிமைச் சட்டம் 1882