நில அபகரிப்பு தடுப்பு பிரிவு முகவரி ( திருச்சி, சேலம், தஞ்சாவூர், கடலூர், சென்னை, மதுரை, விருதுநகர் ) - முதலில் நில அபகரிப்பு என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம். ஒருவர் நிலத்தை அவருக்கு தெரியாமல் பதிவு செய்து அதனை அனுபவித்து வருபவர்களை நில அபகரிப்பவர் என்று கூறலாம். இது போன்ற சம்பவங்கள் நிறைய நிறைய நடக்கின்றன. இது பெரும்பாலும் நிலத்தை கவனிக்க முடியாமல் போவது ஒரு காரணமாகும். அச்சமயம் மோசடி நபர்கள் ஒரிஜினல் பத்திரம் செய்து கிரயம் செய்து விற்று விடுகின்றனர் அல்லது வைத்து கொள்கின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் உங்களுக்கு ஏற்பட்டால் முதலில் புகார் செய்ய வேண்டியது ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப்பிரிவில் சென்று உங்கள் புகாரை கொடுக்க வேண்டும். இதனை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தான் விசாரணை செய்வார்.
இதையும் பார்க்க: பட்டா சிட்டா
இதனை நேரில் அல்லது பதிவு தபால் மூலமும் கொடுக்கலாம். அப்படி கொடுக்கும்போது நிலம் உங்களுடையது தான் என்பதற்கு ஆதாரமாக உள்ள ஆவணங்களின் நகல்கள் அனைத்தும் இணைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். முப்பது நாட்களுக்குள் உங்களுக்கு பதில் ஏதும் வரவில்லை என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
இதையும் பார்க்க: பட்டா சிட்டா எடுத்தல்
நில அபகரிப்பு தடுப்பு பிரிவு சென்னை முகவரி
காவல் கண்காணிப்பாளர்,
நில அபகரிப்பு தடுப்பு தலைமை அலுவலகம்,
மைலாப்பூர்,
சென்னை 600 004.
தொலைபேசி எண் - 044 28 443 945.
இதையும் பார்க்க: பட்டா சிட்டா online