நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவு - தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த நீர்நிலை ஆக்கிரமிப்பு அனைத்தையும் அகற்ற ஒவ்வொரு மாவட்ட கலெக்டருக்கும் ஐ கோர்ட் உத்தரவு இட்டு உள்ளது. கடந்த ஜூலை மாத ரிப்போர்ட் படி, தமிழ் நாட்டில் மொத்தமாக 57, 000 க்கும் அதிகமான நீர் நிலைகள் உள்ளது எனவும் அவற்றில் 8, 500 க்கும் குறைவான நீர்நிலைகளும் தான் அகற்றி இருக்கிறார்கள் எனவும் அதில் கூறி இருந்தார்கள்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவு


மேலும் நீர்நிலை புறம்போக்கு நிலங்களை பதிவு செய்த அதிகாரிகளுக்கும் சம்பள ஊதியம் குறைவாகவும் இருக்கும் எனவும் அதில் தெரிவித்துள்ளார்கள். மழை காலங்களில் அதிகமாக நீர் தேங்குவதற்கும் இந்த நீர்நிலை நிலங்கள் இடங்கள் காரணமாக அமைகின்றன. அது மட்டுமில்லாமல் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் வேளாண்மை தொழிலுக்கு மிகவும் உபயோகமாகவும் இருக்கும். அதனால் ஒட்டுமொத்த நிலங்களின் பட்டியல் டிசம்பர் 2021 முதல் வாரத்தில் வர வேண்டும் என்று ஐ கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக ஏரி, குளம் மற்றும் குட்டை பகுதிகளில் தனியார் நிலம் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். இதனை முற்றிலும் ஒழிக்கவே அரசாங்கம் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது.

புதிதாக நீர்நிலை நிலங்களை பதிவு செய்தாலும், மின் இணைப்பு கொடுத்தாலும் மற்றும் அவர்களுக்கு பட்டா வழங்கினாலும் அவர்கள் மேல் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த நிலங்களின் தற்போது வழிகாட்டி மதிப்பு பூஜ்ஜியம் எனவும் பதிவுத்துறை ஐஜி டிசம்பர் 08, 2021 அன்று குறிப்பிட்டிருந்தார்.

அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு புகார் 

உங்கள் ஊரில் உள்ள புறம்போக்கு இடங்களை யாராவது ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் நீங்களே புகார்களை கொடுக்கலாம். அதில் வழக்கம் போல் அனுப்புநர், பெறுநர், பொருள் மற்றும் விவரங்கள் என அனைத்தும் பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கலாம். 

நில அபகரிப்பு சட்டம் Pdf

தொலைந்த பத்திரம் பெறுவது எப்படி

Eservices