ஈட்டு கடன் பத்திரம்

ஈட்டு கடன் பத்திரம் - சொந்த பத்திரத்தை அடமானம் வைப்பதை ஈட்டு கடன் என்பர். அதாவது பணம் வாங்குபவர் பணம் பெறுபவரிடம் அவருடைய நிலம் அல்லது வீட்டின் பத்திரத்தை வைத்து கடன் பெறுவதாகும். மேலும் அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஈட்டு பத்திரம் என்று அதில் மென்ஷன் செய்வர். அவ்வாறு செய்யும்போது சாதாரண கடன் பத்திரம் போல் இல்லாமல் இது அவர்களுக்கே சொந்தம் கொண்டாடும் அளவு 50 சதவீதம் இருக்கும். ஏனெனில் இதன் கால அளவு பெரும்பாலும் 11 முழு மாதங்கள் ஆகும். இந்த கால அளவுக்குள் பணம் வாங்குபவர் தரவில்லை என்றால் அவரின் சொத்தானது பணம் கொடுத்தவர் கையில் அல்லது அவருக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை 50 சதவீதம் வந்து விடும்.

ஈட்டு கடன் பத்திரம்


நீதிமன்றத்திற்கு சென்று பணம் கொடுத்தவர் முறையிட்டால் பணம் வாங்குபவரின் சொத்தின் பறிமுதல் அல்லது ஜப்தி ஆகும் வாய்ப்பு மிகவும் அதிகமாகும்.

ஈட்டு கடன் பத்திரம் செயல்படும் முறை

இப்பொழுது ஒருவர் பத்திரத்தை வைத்து கடன் வாங்கினார் என்றால் அவருக்கு இத்தனை மாதங்கள் அல்லது இத்தனை வருடங்களுக்கு என பணம் தருவார். அந்த பத்திரத்தை வைத்து அவர் திருப்பி செலுத்தும்போது அதற்குண்டான அசல் மற்றும் வட்டியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்திட வேண்டும். இல்லையென்றால் கடன் கொடுத்தவர்கள் நீதிமன்றம் சென்று வழக்கு போடுவார்கள். அதனால் தான் நிறைய பேர் ஈட்டு கடன் தருவார்கள்.

சிட்டா அடங்கல் படிவம் 

நில உரிமை