ஆடு வளர்ப்பு அரசு மானியம் 2024 - கால்நடைகளை பராமரிக்கவும் அதனை ஒரு தொழிலாகவும் செய்ய தமிழ்நாடு அரசு வழிவகுத்துள்ளது. ஏனெனில் கால்நடைகள் தற்போது குறைந்த அளவே உள்ளன. அதாவது 13 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளன. இந்த பிரச்சனைகள் நீடிக்காமல் இருக்க மானியங்கள், கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சொந்தமாக ஆடு வைத்திருந்தாலும் சரி அல்லது ஆடே இல்லாதவர்கள் என்றாலும் சரி அவர்களுக்கு 90 சதவீதம் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இதனை வேளாண்மை துறை தான் வழங்கி வருகின்றது. தகுதியுள்ள பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
இதையும் பார்க்க: வேளாண்மை துறை மானியம்
இதற்கு பயனாளிகள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இருப்பிட சான்று, வருமான சான்று, நிலம் இல்லாதவர் சான்று, விதவையாக இருந்தால் சான்று, ஊனமுற்றோராக இருந்தால் சான்று போன்றவைகள் கொடுத்தால் போதுமானது. பிறகு அதனை சரிபார்த்து விட்டு நீங்களே சென்று ஆடுகளை பார்த்து வாங்கி கொள்ளலாம். இதற்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 30 சதவீதமும் மானியங்களாக கொடுத்து வருகின்றது.
இதையும் பார்க்க: விவசாய டிராக்டர் மானியம்