திருவள்ளூர் மாவட்டம் - 01 ஜூலை 1997 ஆம் ஆண்டே இம்மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 3424 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ள திருவள்ளூர் மாவட்டம் முதலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் இருந்தது. 2011 நிலவரப்படி 37 லட்சத்திற்கும் மேலாக மக்கள் தொகையினை இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய திருவள்ளூரின் கலெக்டராக பணிபுரிபவர் பெயர் மருத்துவர் திரு. ஆல்பி மற்றும் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் திரு. வருண் குமார் உள்ளனர். இதன் வாகன பதிவு எண் TN 12, 13, 18 மற்றும் 20 ஆகும்.
மாநகராட்சி
1. ஆவடி
நகராட்சிகள்
1. திருவள்ளுர்
2. திருத்தணி
3. பூந்தமல்லி
4. திருவேற்காடு
5. பொன்னேரி
6. திருநின்றவூர்.
பேரூராட்சிகள்
1. ஆரணி
2. ஊத்துக்கோட்டை
3. மீஞ்சூர்
4. கும்மிடிப்பூண்டி
5. திருமழிசை
6. நரவாரிக்குப்பம்
7. பள்ளிப்பட்டு
8. பொதட்டூர்பேட்டை.
இதே போல மற்ற உள்ளாட்சி அமைப்புகள் வட்டம் ஒன்பது, கோட்டம் மூன்று, ஊராட்சி ஒன்றியங்கள் 14, ஊராட்சிகள் 526, வருவாய் கிராமங்கள் 792, மக்களவை தொகுதி நான்கு மற்றும் சட்டமன்ற தொகுதிகள் 10 உள்ளன.
Home - PattaChitta.Co.in.