செட்டில்மெண்ட் என்றால் என்ன

செட்டில்மெண்ட் என்றால் என்ன ( தான செட்டில்மென்ட் விளக்கம் ) - செட்டில்மெண்ட் பத்திரம் தனது குடும்பத்தில் உள்ள சொத்தை தானமாக அதாவது பரிசாக கொடுப்பது செட்டில்மெண்ட் எனப்படும். தான் உயிருடன் இருக்கும்போதே சொத்தை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு யாருக்காவது சுய நினைவோடு எழுதி தருவதாகும். அவ்வாறு தானமாக கொடுக்கும் செட்டில்மெண்ட பத்திரத்தை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது. இது போன்ற வழக்குகள் ஏராளமாக குவிந்து உள்ளது. ஆனால் ரத்து செய்யும் பத்திரமும் விற்ற சொத்தையும் திரும்ப கண்டிப்பாக வாங்க முடியாது.

தானம் எழுதி கொடுப்பவரை ஏமாற்றியோ அல்லது கட்டாயப்படுத்தி சொத்தினை வாங்கும் நபர்களுக்குக்கு பின்னாளில் ஆபத்து மிகவும் அதிகமாகும். ஏனென்றால் சட்டம் தான செட்டில்மென்ட் எழுதி கொடுப்பவரை வற்புறுத்தி எழுதி வாங்கினால் பின்னாளில் அதனை காவல்துறையினரிடம் காம்ப்லின்ட்செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதனை எளிதில் ரத்து செய்ய முடியும்.

அப்டேட் ஏப்ரல் 18, 2022

தான செட்டில்மென்ட் மூலம் ஒருவர் சம்மந்தப்பட்ட நபரை ஏமாற்றியது தெரிந்தால் அவர்கள் மாவட்ட சார் பதிவாளரிடம் செல்லலாம். அவர் அந்த பத்திரத்தை ரத்து செய்யும் உரிமை உள்ளது எனவும் சொத்தின் உரிமையாளர் மூத்த குடிமகனாக இருக்க வேண்டும் எனவும் சமீபத்தில் வந்துள்ள பத்திரப்பதிவு சுற்றரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆவணபதிவு பின்னர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறை மற்றும் நீதிமன்றம் சென்று தான் பார்க்க வேண்டும். மாவட்ட சார் பதிவாளர் இது போன்ற பிரச்சனைகளை பார்க்க மாட்டார் எனவும் அதில் உள்ளது.

செட்டில்மெண்ட் என்றால் என்ன


எதற்காக ஒரு சில நபர்கள் கொடுத்த தான பத்திரத்தை திரும்ப பெறுகிறார்கள் என்றால் சொத்தை பெற்ற நபர் தேவை இல்லாத செயலில் தங்கள் அனுமதி இன்றி செய்தால் திரும்ப பெற வழக்கு தொடுவார்கள். அதற்கு முன்னரே சொத்தை தானமாக விற்கும் நபர் சில பல கண்டிஷன் போட்டு பத்திரத்தை எழுத வேண்டும். அதில் சொத்தை விற்கும் நபர் என்ன வேண்டுமானாலும் கண்டிஷன்ஸ் அப்ளை செய்யலாம்.

தானம் கொடுப்பவர் கவனிக்க வேண்டியவை 

செட்டில்மெண்ட் பத்திரம் தானமாக வழங்கும் நபர் தனது சுய சம்பாதித்த சொத்தை மட்டும் தான் எழுத முடியும். பூர்வீக சொத்தை தானமாக எழுதி தர முடியாது. தானம் கொடுக்கும் நபர் கண்டிஷன் போட்டு பத்திரம் எழுதுவது நல்லது. கண்டிஷன் போட்டு தான செட்டில்மெண்ட செய்தால் பின்னாளில் அதனை ரத்து செய்யும் மிகவும் அதிகம் ஆகும். 

தானம் பெறுபவர் கவனிக்க வேண்டியவை 

தானம் பெறுபவர் உங்களுக்கு அண்ணன் தம்பி அல்லது தாய் தந்தை யார் வேண்டுமானாலும் தானம் கொடுக்கலாம். இவர்களில் யாராவது எழுதி கொடுக்கும் பட்சத்தில் பிற குடும்ப நபர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று ஆலோசிப்பது நல்லது ஆகும். இதை தவிர சுவாதீனம் கண்டிப்பாக நீங்கள் தானம் கொடுக்கும் நபரிடம் வாங்கி ஆக வேண்டும்.

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் 

தனியார் நில ஆக்கிரமிப்பு சட்டம்

செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா

Tn.Gov.In