திருப்பூர் மாவட்டம் - மிகவும் பெரிய நகரமான கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் திருப்பூர் முதலில் இருந்தது. பிறகு தனி அந்தஸ்து, வருவாய் மற்றும் மக்கள்தொகைக்கேற்ப 22 பிப்ரவரி 2009 அன்று தனி மாவட்டமாக தமிழ்நாடு அரசாங்கத்தில் அறிவிக்கப்பட்டது. 24 லட்சம் மக்கள்தொகை கொண்டுள்ள இம்மாவட்டம் சுமார் 5186 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டிருக்கின்றது. இதன் வாகன பதிவு எண் TN 39, TN 42 மற்றும் அஞ்சல் குறியீடு 641 601 ஆகும். திருப்பூர் மாவட்டத்தின் ஆட்சியராக மருத்துவர் திரு. வினீத் அவர்கள் உள்ளார்.
நகராட்சிகள்
1. காங்கேயம்
2. வெள்ளக்கோவில்
3. உடுமலைப்பேட்டை
4. தாராபுரம்
5. பல்லடம்
6. திருமுருகப்பூண்டி.
இதே போல 14 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 265 ஊராட்சிகள், 350 வருவாய் கிராமங்கள் உள்ளன. மேலும் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநகராட்சியாக திருப்பூர் உள்ளது.
Home - PattaChitta.Co.in.