கிசான் விகாஸ் பத்திரம்

கிசான் விகாஸ் பத்திரம் - எப்படி சிறு குறு விவசாயிகளுக்கு கிசான் கார்டு உள்ளதோ அதேபோன்று பொது மக்களுக்கும் கிசான் விகாஸ் உள்ளது. இரண்டும் ஒன்றே என நினைத்து கொள்ள வேண்டாம். இரண்டும் வெவ்வேறு திட்டங்கள் உடையவையாகும். இதில் பத்திரம் என குறிப்பிட்டதை பட்டா சிட்டா நிலம் மற்றும் வீடு பத்திரம் என நினைத்து கொள்ள வேண்டாம். இது ஒரு சான்றிதழ் மட்டுமே.

மற்ற அஞ்சலக திட்டங்களை போன்று தான் இந்த கிசான் திட்டமும் ஆகும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கணக்கை தொடங்கலாம். மற்றவைகளுக்கும் இவைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னவென்றால் பண வேறுபாடு மட்டுமே. இந்த திட்டத்தில் சேர்ந்தால் போட்ட முதலீடு விட இரண்டு மடங்காக வரும். இதனை 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2011 இல் நீக்கம் செய்தார்கள். மறுபடியும் 2014 ஆம் ஆண்டு தொடங்கி இப்போது வரையுமே செயல்பட்டு வருகிறது.

கிசான் விகாஸ் பத்திரம்


கிசான் விகாஸ் பற்றி Scheme

1. இதன் காலம் 10 வருடங்கள் 04 மாதங்கள்.

2. ரூபாய் 1000 முதல் 10 லட்சம் வரையும் முதலீடு செய்ய முடியும்.

3. ரூபாய் 50, 000 க்கு மேல் பணம் கட்டினால் பான் கார்டும் அதற்குமேல் பணம் கட்டினால் வருமான வரி சான்றிதழும் அவசியம்.

4. இடையில் கணக்கினை நிறுத்த வேண்டுமென்றால் 2 வருடங்கள் 06 மாதங்கள் முழுமையாக முடிவடைந்து இருக்க வேண்டும்.

5. முதலில் பணம் கட்டும்போது கொடுக்கப்படும் பத்திரத்தை பத்திரமாக வைத்தல் நல்லது.

6. எவ்வளவு பணம் கட்ட போகிறீர்களோ அதே அளவு இரட்டிப்பு பணம் வரும். உதாரணமாக நீங்கள் 50, 000 செலுத்த போகிறீர்கள் என்றால் உங்களுக்கு 1, 00, 000 வரும்.

மாதாந்திர சேமிப்பு திட்டம்