எழுவாய் பயனிலை செயப்படுபொருள் எடுத்துக்காட்டு ( eluvai payanilai seyapaduporul in tamil ) - இந்த மூன்று வார்த்தைகள் தனித்தனியே ஆகும். ஒரு வாக்கியம் என்று எடுத்துக்கொண்டால் அதில் செயல், வினா, பெயர்ச்சொல் மற்றும் பல அடங்கி இருக்கும். ஒரே தொடரில் அல்லது வாக்கியத்தில் இந்த மூன்றும் எழுத முடியும். அதே சமயத்தில் ஒன்றை நீக்கிவிட்டு மற்ற இரண்டினை எழுதினாலும் பொருள் தரும்.
எழுவாய் என்றால் என்ன
யார், எது மற்றும் எவை இந்த மூன்று வினா வடிவில் முதலில் அமைந்தால் அவை எழுவாய் ஆகும்.
எடுத்துக்காட்டு
ராமர் பாடத்தினை படித்தார்
இதில் ராமர் என்பது தான் எழுவாய். இந்த ராமர் என்னும் பெயர்ச்சொல் நீக்கிவிட்டால் யார் படத்தினை படித்தார் என்று வடிவில் இருக்கும். இதனை தான் எழுவாய் என்போம்.
இதையும் படிக்கலாமே: சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்
பயனிலை
எப்போதும் வாக்கியத்தின் இறுதியில் வரும். ஒரு செயலை அல்லது வினையை இது குறிக்கும்.
எடுத்துக்காட்டு
நான் பாடம் படித்தேன்
மேற்கண்ட தொடரில் படித்தேன் என்னும் இறுதி வார்த்தை செயலை குறிக்கிறது.
செயப்படுபொருள்
யாரை, எவற்றை மற்றும் எதை என்னும் வினா வந்தால் அங்கு செயற்படுபொருள் இருக்கிறது என்பது அர்த்தம்.
எடுத்துக்காட்டு
நான் புத்தகம் படித்தேன்.
இதில் புத்தகம் என்பது செயற்படுபொருளாக இங்கு உள்ளது.
இதையும் படியுங்க: ஈகை பொருள்