விவசாய மின் இணைப்பு 2024

விவசாய மின் இணைப்பு 2024 ( தட்கல் மின் இணைப்பு 2024 ) - தோட்டக்கலை மற்றும் அதனை சார்ந்த விவசாயிகளுக்கு இலவசமாக 23.09.2021 அன்றிலிருந்து இன்று வரையும் மொத்தமாக 87, 465 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று மின்சார துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். மீதமுள்ள 12, 535 மின் இணைப்புகள் எல்லாம் இந்த மாத இறுதிக்குள் கிடைத்துவிடும் என்றும் கூறி இருக்கிறார்கள். இந்த ஒரு லட்சம் மின் இணைப்புகள் 2013 லிருந்து 2018 வரையும் அப்ளை செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதில் 10, 000 திட்டம், 25, 000 திட்டம் மற்றும் 50, 000 திட்டம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த இணைப்பிற்கு தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.

தட்கல் மின் இணைப்பு என்றால் என்ன

ஏப்ரல் 17, 2022

திருச்சி மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் வழங்கப்பட்டுள்ளன. 2003 முதல் 2013 வரையும் விண்ணப்பத்த விவசாயிகளுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

விவசாய மின் இணைப்பு 2024


அப்டேட் ஏப்ரல் 12, 2022

இலவச தட்கல் மின் இணைப்பு 31.03.2022 அன்று கால அவகாசம் முடிந்துவிட்டது. இதனால் மறு அறிவிப்பு வரையும் விவசாயிகள் காத்து கொண்டிருக்க வேண்டும். அடுத்த வாரம் முதல் இந்த இலவச மின் இணைப்பு அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

19.03.2022 அன்று தமிழக அரசு சட்டசபையில் வேளாண்மை துறை பட்ஜெட் பற்றியும் விவசாயம் சம்மந்தப்பட்ட துறையின் செய்திகளை 20.03.2022 அன்று பேசி இருந்தார்கள். அப்போது தான் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதையும் பற்றி பேசி இருந்தார்கள்.

ஒரு சில விவசாயிகள் ஏற்கனவே 25, 000 அல்லது 50, 000 திட்டம் கீழ் மின்னிணைப்பிற்கு காத்து கொண்டு இருக்கின்றனர். ஆனாலும் அவர்களில் பெரும்பாலானோர் 3A1 தோட்டக்கலை மின் இணைப்பு வாங்கி இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு இலவச இணைப்பு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்துருந்தார்கள். இது குறித்த விவரங்களை தெளிவாக 11.03.2022 மற்றும் 22.03.2022 தேதிகளில் மின்சாரம் துறை சுற்றறிக்கையில் தோட்டக்கலை மின் இணைப்பு ஏற்கனவே வைத்திருப்பவர்களும் மின்சாரம் வாங்கலாம் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இது வரையும் நான்கரை லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் 2003 லிருந்தும் இன்று வரையும் காத்து கொண்டு இருக்கின்றனர். இந்த முறை தட்கல் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்படாது எனவும் சாதாரண மக்களுக்கு முன்னரிமை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

பூந்தோட்ட மின் இணைப்பு

இலவச மின்சாரம் விவசாயம் 2024